ஏமாற்றிய 'ஏஸ்', மயக்க வைக்குமா 'மதராஸி' | தமிழில் வரவேற்பு இல்லை என்றாலும் 100 கோடி வசூலில் 'குபேரா' | 'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் |
விக்ரம் நடிப்பில் இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ‛தங்கலான்' படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது அருண்குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதையடுத்து மடோன் அஸ்வின், ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மகிழ்திருமேனி சமீபத்தில் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்கிறார்கள்.
அஜித்தை வைத்து நீண்டகாலமாக விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார் மகிழ்திருமேனி. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இன்னும் ஓரிரு விடுபட்ட காட்சிகள் மட்டும் படமாக உள்ளதாம். அதோடு தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப்படம் வெளியான பிறகு விக்ரம் படத்திற்கான பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.