ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
விக்ரம் நடிப்பில் இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ‛தங்கலான்' படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது அருண்குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதையடுத்து மடோன் அஸ்வின், ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மகிழ்திருமேனி சமீபத்தில் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்கிறார்கள்.
அஜித்தை வைத்து நீண்டகாலமாக விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார் மகிழ்திருமேனி. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இன்னும் ஓரிரு விடுபட்ட காட்சிகள் மட்டும் படமாக உள்ளதாம். அதோடு தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப்படம் வெளியான பிறகு விக்ரம் படத்திற்கான பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.