மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் | வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் சைப் அலிகான் | 'குடும்பஸ்தன்' எனது சொந்தக் கதை : இயக்குனர் சொல்கிறார் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 27) பொள்ளாச்சியில் துவங்கி உள்ளது. ஆனைமலை, மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா மற்றும் படக்குழுவினர் தரிசனம் செய்த பின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஆர்ஜே-வாக இருந்து காமெடி நடிகராக மாறி, கதாநாயகனாகவும், இயக்குனராகவும் உயர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. “மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்” ஆகிய படங்களை என்ஜே சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கினார்.
அவர் முதல் முறையாக தனியாக இயக்க உள்ள படம்தான் 'சூர்யா 45'. பாலாஜி சொன்ன கதையைக் கேட்டு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு விஜய்யையும் சந்தித்து கதை சொல்லியிருந்தார் பாலாஜி. ஆனால், அந்தக் கதையில் விஜய் நடிக்க சம்மதிக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கதைதான் சூர்யா 45 கதையா என்பது பாலாஜி பின்னால் எப்போதாவது பேட்டி கொடுத்தால் தெரிய வரும்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.