கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 27) பொள்ளாச்சியில் துவங்கி உள்ளது. ஆனைமலை, மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா மற்றும் படக்குழுவினர் தரிசனம் செய்த பின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஆர்ஜே-வாக இருந்து காமெடி நடிகராக மாறி, கதாநாயகனாகவும், இயக்குனராகவும் உயர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. “மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்” ஆகிய படங்களை என்ஜே சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கினார்.
அவர் முதல் முறையாக தனியாக இயக்க உள்ள படம்தான் 'சூர்யா 45'. பாலாஜி சொன்ன கதையைக் கேட்டு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு விஜய்யையும் சந்தித்து கதை சொல்லியிருந்தார் பாலாஜி. ஆனால், அந்தக் கதையில் விஜய் நடிக்க சம்மதிக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கதைதான் சூர்யா 45 கதையா என்பது பாலாஜி பின்னால் எப்போதாவது பேட்டி கொடுத்தால் தெரிய வரும்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.