22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களில் பெண்களுக்காக சண்டை போட்டிருக்கிறார். ஆனால் பெண்களோடு சண்டை போடவில்லை. அரிதாக சில படங்களில் நாயகிகள் முகமூடி அணிந்து அவருடன் சண்டை போடுவார்கள். சில விநாடிகளிலேயே அவர் தன்னோடு சண்டை போடுவது பெண் என்பதை கண்டுபிடித்து விடுவார். இப்படியான காட்சிகள் சில படங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஒரு நடிகை எம்.ஜி.ஆரோடு ஆக்ரோஷமாக வாள் சண்டை போட்டுள்ளார். அவர் எம்.ஆர்.சந்தான லட்சுமி.
1939ம் ஆண்டு வெளிவந்த 'பிரஹ்லாதா' என்ற படத்தின் நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமி நடித்தார். நாயகன் டி.ஆர்.மகாலிங்கம். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பிரஹலாதாவாக நடித்தார். அவரது தாயாக என்.ஆர்.சந்தானலட்சுமி நடித்தார். எம்ஜிஆர் இந்திரனாக நடித்தார். கதைப்படி பிரஹலாதாவை இந்திரனிடமிருந்து காப்பாற்ற அவரது தாய் இந்திரனோடு போர்புரிய வேண்டும். அந்த காட்சியில் சந்தான லட்சுமி எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்டார். இந்த சண்டை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
எம்.ஆர்.சந்தான லட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர். 1935ம் ஆண்டு 'ராதா கல்யாணம்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சந்திரகாசன், அம்பிகாபமதி, ஆரியமாலா, மனுநீதி சோழன், ஜெகதல பிரதாபன், மதுரை வீரன், மனம் போல் மாங்கல்யம், புதையல் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1956ம் ஆண்டில் தனது 52வது வயதில் காலமானார்.