ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
1941ல் தயாராகி 1942ல் வெளியான தெலுங்கு படம் 'பாலநாகம்மா'. இதில் என்.டி.ராமராவ், அஞ்சலி தேவி நடித்திருந்தார்கள். இதே படத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். இதனை சங்கர் இயக்கினார். மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படம்.
சரத்பாபு நாயகனாக நடித்திருந்தார். ஸ்ரீதேவி பால நாகம்மாவாக நடித்திருந்தார், கே.ஆர்.விஜயா நாகதேவியாக நடித்திருந்தார். இவர்கள் தவிர அசோகன், மஞ்சுபார்கவி, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளிவந்த பிறகு கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக படத்தின் காமெடி காட்சிகள் விரசமாக இருப்பதாகவும், இளையராஜாவின் மேற்கத்திய பின்னணி இசை கதைக்கு பொருந்தவில்லை என்றும், சரத்பாவுவின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் ஸ்ரீதேவியின் அழகும், நடிப்பும், நடனமும் கொண்டாடப்பட்டது.
படத்தின் பின்னணி இசை விமர்சிக்கப்பட்டாலும் பாடல்கள் ஹிட்டானது. குறிப்பாக 'பிலஹரி' ராகத்தில் அமைந்த 'கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவி எழுத...' என்ற பாடல் இன்றைக்கும் ரசிக்கப்பட்டு வருகிறது.