ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஆந்திராவில் உள்ள கடப்பா தர்ஹாவில் 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்த நிகழ்வில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் அவர் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் அடுத்த வருடம் நிச்சயமாக நடிகர் ராம்சரண் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என உறுதி அளித்திருந்தார். ராம்சரணிடமும் இந்த கஜல் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
சமீப நாட்களாக அய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் ராம்சரண் ஏ.ஆர் ரஹ்மானின் வேண்டுகோளை சிறிதும் தட்டாமல் கடப்பா தர்ஹாவுக்கு சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வழிபாட்டை செலுத்தினார். ராம்சரணின் இந்த வருகை அங்கே தர்காவில் கூடியிருந்தவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.