'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஆந்திராவில் உள்ள கடப்பா தர்ஹாவில் 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்த நிகழ்வில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் அவர் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் அடுத்த வருடம் நிச்சயமாக நடிகர் ராம்சரண் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என உறுதி அளித்திருந்தார். ராம்சரணிடமும் இந்த கஜல் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
சமீப நாட்களாக அய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் ராம்சரண் ஏ.ஆர் ரஹ்மானின் வேண்டுகோளை சிறிதும் தட்டாமல் கடப்பா தர்ஹாவுக்கு சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வழிபாட்டை செலுத்தினார். ராம்சரணின் இந்த வருகை அங்கே தர்காவில் கூடியிருந்தவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.