Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைதூக்கி விட்ட இயக்குனர்களை எல்லாம் ஒதுக்கிய சூர்யா கங்குவாவில் சாதித்தது என்ன ? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

20 நவ, 2024 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Suriya-left-all-the-directors-who-had-raised-their-hands-behind-him:-Netizens-criticize


இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வரலாற்று பேண்டஸி படமாக வெளியானது 'கங்குவா'. ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்தே இந்த படம் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. படத்தின் மோசமான கதையம்சம் ஒரு பக்கமும் இரைச்சலுடன் ரசிகர்களின் காதுகளை பதம் பார்த்த பின்னணி இசை ஒரு பக்கமும் என இந்த இரண்டு குறைகள் அதிகம் பேரால் பேசப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் நடிப்பதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார் சூர்யா. குறிப்பாக இயக்குநர் சிவா ரஜினியை வைத்து 'அண்ணாத்த' படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த படத்தை ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் விட்டுக்கொடுத்தார் சூர்யா. 'அண்ணாத்த' படத்தின் தோல்விக்கு பிறகும் கூட சிவாவின் மீதான நம்பிக்கையில் இந்த படத்தில் நடித்தார். படம் இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கப்படுவதற்கு, படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பில்டப்புகள் தான் காரணமாக அமைந்துவிட்டன. குறிப்பாக 2000 கோடி வசூலிக்கும் என்கிற பேச்சு அப்படியே எதிராக திரும்பிவிட்டது.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் சூர்யாவின் தவறான முடிவு குறித்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதாவது சூர்யாவின் திரையுலக பயணத்தில் ஆரம்ப காலத்தில் மிக முக்கியமான வெற்றிகளை கொடுத்தவர்கள் என்றால் இயக்குனர்கள் பாலா, கவுதம் மேனன், ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் ஹரி என்கிற இந்த நான்கு இயக்குனர்கள் தான். இவர்களுடன் சூர்யா இணைந்து பணியாற்றி வெளிவந்த படங்கள் எல்லாமே இப்போதும் ரசிகர்கள் விரும்பி பார்க்கக் கூடியவை.

அதிலும் சூர்யா கடைசியாக கவுதம் மேனன் உடன் இணைந்து பணியாற்றிய 'வாரணம் ஆயிரம்', பாலா இயக்கத்தில் நடித்த 'பிதாமகன்' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதே சமயம் ஹரி இயக்கத்தில் ஏற்கனவே 'சிங்கம், சிங்கம் 2' என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்கள் சூர்யாவுக்கு கிடைத்திருந்தாலும் 'சிங்கம் 3' பெரிய அளவில் போகாததால் இயக்குனர் ஹரியிடமிருந்து ஒதுங்கினார் சூர்யா. அதேபோல கஜினி என்கிற மிகப்பெரிய ஹிட்டை ஏ.ஆர் முருகதாஸ் இடமிருந்து பெற்ற சூர்யா, அதற்கடுத்து அவரது இயக்கத்தில் நடித்த 'ஏழாம் அறிவு' படம் சரியாக போகவில்லை என்றாலும் கூட இந்த இரண்டு படங்களுமே இப்போது கூட ரசிகர்களால் ரசித்துப் பார்க்கும் விதமாக தான் இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி தொலைக்காட்சியிலும் இந்த படங்கள் ஒளிபரப்பாகின்றன.

ஆனால் கவுதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் பாலாவுடன் 'வணங்கான்' படத்திலும் இயக்குனர் ஹரியிடம் 'அருவா' படத்திலும் மற்றும் சில காரணங்களால் ஏ.ஆர் முருகதாஸிடமும் இருந்து ஏதேதோ காரணங்களை கூறி அப்படியே ஒதுங்கி விட்டார் சூர்யா. அதுமட்டுமல்ல 'சூரரை போற்று' என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த சுதா கொங்கராவின் டைரக்சனில் அடுத்து ஒரு படம் நடிப்பதாக கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அந்த படத்தையும் கைவிட்டார். அதற்கு அந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் தோல்வி ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இப்படி தனக்கு வெற்றி கொடுத்தவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்காமல், அவர்களிடம் எல்லாம் கண்டிராத எந்த நம்பிக்கையை இயக்குனர் சிவாவிடமும் அவர் சொன்ன கதையிலும் சூர்யா வைத்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.

இனிவரும் நாட்களிலாவது இந்த இயக்குனர்களுடனான தனது கருத்து வேறுபாடுகளை மறந்து தன்னை மேலே ஏற்றிவிட்ட மேற்கூறிய நான்கு இயக்குனர்களிடமும் சூர்யா சீரான இடைவெளிகளில் படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் அவர் மீண்டும் இழந்த தன்னுடைய பார்முக்கு திரும்ப முடியும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிரிவு' பற்றி பார்த்திபனின் பதிவு'பிரிவு' பற்றி பார்த்திபனின் பதிவு கடப்பா தர்ஹா தரிசனம் ; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ராம்சரண் கடப்பா தர்ஹா தரிசனம் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Good Bad Ugly
    • குட் பேட் அக்லி
    • நடிகர் : அஜித் குமார் ,பிரசன்னா
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :ஆதிக் ரவிச்சந்திரன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,பிரசன்னா,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in