துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதே நாளில் நீரிழிவு தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நண்பர்களே நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன்.
நீரழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால் இது ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல, நீரழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும். இது கடுமையான பார்வை பிரச்னைகளை ஏற்படுத்தும். குருட்டுத் தன்மையையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி.
வழக்கமாக கண் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையை பாதுகாக்க உதவலாம். நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அல்லது யாரையாவது அறிந்திருந்தால் உங்கள் பார்வையை பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்த செய்தியை பரப்பி ஒளிமயமான எதிர்காலத்தை காண அனைவருக்கும் உதவுவோம் நன்றி என அந்த பதிவில் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.