ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதே நாளில் நீரிழிவு தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நண்பர்களே நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன்.
நீரழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால் இது ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல, நீரழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும். இது கடுமையான பார்வை பிரச்னைகளை ஏற்படுத்தும். குருட்டுத் தன்மையையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி.
வழக்கமாக கண் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையை பாதுகாக்க உதவலாம். நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அல்லது யாரையாவது அறிந்திருந்தால் உங்கள் பார்வையை பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்த செய்தியை பரப்பி ஒளிமயமான எதிர்காலத்தை காண அனைவருக்கும் உதவுவோம் நன்றி என அந்த பதிவில் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.