ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
பிரபல மலையாள இயக்குனரும், நடிகையுமான கீது மோகன்தாஸ் தற்போது இயக்கி வரும் படம் 'டாக்சிக்'. 'கேஜிஎப்' புகழ் யஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம். இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுத்திரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் பெங்களூரை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நடந்து வருகிறது. குறிப்பாக பீன்யா, ஜலஹள்ளி பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான மரங்களை 'டாக்சிக்' படக்குழுவினர் வெட்டியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக மாநில அரசுக்கு புகார்கள் குவிந்ததை தொடர்ந்து கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மரங்களை வெட்ட அனுமதியளித்தவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.