நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2 . மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் மீதமுள்ள ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர். முதலாவதாக ராஷ்மிகா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
டப்பிங் பேசிய போட்டோவை பகிர்ந்து, ‛‛புஷ்பா 2 படத்தின் முதல்பாதி டப்பிங் முடிந்து, இரண்டாவது பாதி டப்பிங் பணி நடக்கிறது. முதல்பாதியை விட இரண்டாம் பாதி பிரமாதமாக உள்ளது. என் வாழ்வில் சிறந்த அனுபவம் இந்தப்படம். என் முகம் இப்படி சோகமாக இருக்க காரணம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதே என்பது தான்'' என குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.