கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்' ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். அவர் இயக்கிய கடைசி இரண்டு படங்களுக்காக, முதலில் இயக்கிய இரண்டு படங்களை விடவும், கை நிறைய சம்பளமாக வாங்கினார். அந்தப் பணத்தைத் திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்தார்.
தனது உதவியாளரான சிவபாலன் முத்துக்குமாரை இயக்குனராக அறிமுகப்படுத்தி, தனது நண்பரான கவினை நாயகனாக்கி 'பிளடி பெக்கர்' படத்தைத் தயாரித்தார். படம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் நெல்சன். ஆனால், தீபாவளி போட்டியில் வெளிவந்த 'அமரன்' படத்துடன் போட்டி போட முடியாமல், படமும் மிகச் சுமாராக இருந்ததால் தோல்வியைத் தழுவியது.
நெல்சனை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தன்னை நம்பி படத்தை வாங்கிய அவர்களுக்கு நஷ்டத் தொகை தந்து சரிக்கட்ட நெல்சன் முடிவெடுத்திருக்கிறாராம். ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இப்படி நஷ்டத்தைத் திருப்பித் தந்திருக்கிறார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் படம் நஷ்டம் என்றாலும், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகிய வருமானம் மூலம் தயாரிப்பாளரான நெல்சனுக்கு எந்த நஷ்டமும் இல்லையாம். தனது அடுத்த தயாரிப்பை மிகவும் கவனமுடன் செய்வாரா நெல்சன், அல்லது 'ஜெயிலர் 2' இயக்கும் வேலை போதும், என அந்தப் பக்கம் போய்விடுவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.