22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
என்.சந்திரா இயக்கத்தில், லட்சுமிகாந்த் பியாரேலால் இசையமைப்பில் அனில் கபூர், மாதுரி தீட்சித், அனுபம் கெர், சங்கி பாண்டே, மந்தாகினி மற்றும் பலர் நடிப்பில் 1988ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளிவந்த படம் 'தேசாப்'. 80களில் வெளிவந்த ஹிந்தி படங்களில் மிகப் பெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்தது.
பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக வந்த படம் வட இந்தியாவைத் தவிர, தென்னிந்திய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. மாதுரி தீட்சித் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருடைய நடனத்தில் அமைந்த 'ஏக் தோ தீன்' பாடல்தான் இந்தப் படத்தை பெரும் அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கக் காரணமாக அமைந்தது.
படத்தின் 36வது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து படத்தின் நாயகி மாதுரி தீட்சித், அப்படத்தின் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்து, “இன்று 'தேசாப்' படத்தின் 36வது ஆண்டு தினம். இந்தப் படம் என் இதயத்தில் ஒரு சிறப்பைப் பிடித்த ஒன்று. உங்களது தொடர்ச்சியான பாராட்டுக்கள் எனக்கு நிறைய புரிய வைக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகும் 'ஏக் தோ தீன்' பாடலும் மோகினியின் கதையும் பார்வையாளர்களால் விரும்பப்படுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அசைக்க முடியாத அன்பிற்கும், ஆதரவிற்கும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிளாசிக் சினிமாவை இன்னும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.