விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த இரண்டு படங்களிலுமே ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பணியாற்றி இருக்கிறார். இந்த படங்கள் குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு லொகேஷன் மட்டுமின்றி சீதோஷ்னம் காரணமாக மாதக்கணக்கில் படப்பிடிப்பை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், விடாமுயற்சி படத்தை பொருத்தவரை அஜித்தை புதிய வடிவில் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதையிலும் ஆக்ஷனிலும் எந்தவித காம்பிரமைசும் செய்யாமல் வேலை வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிஜமாலுமே விபத்து ஏற்பட்ட போதும், அந்த விபத்தையும் ஆக்ஷன் காட்சியாக மாற்றி இருக்கிறோம். அதேபோல் குட் பேட் அக்லி படத்தை எடுத்துக் கொண்டால், அஜித்தின் கேரியரில் ஒரு அதிரடியாக கமர்சியல் படமாக இருக்கும். பில்லா படத்திற்கு பிறகு ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்த படத்தில் அஜித்தை பார்க்கலாம். விடாமுயற்சியை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.