புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த இரண்டு படங்களிலுமே ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பணியாற்றி இருக்கிறார். இந்த படங்கள் குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு லொகேஷன் மட்டுமின்றி சீதோஷ்னம் காரணமாக மாதக்கணக்கில் படப்பிடிப்பை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், விடாமுயற்சி படத்தை பொருத்தவரை அஜித்தை புதிய வடிவில் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதையிலும் ஆக்ஷனிலும் எந்தவித காம்பிரமைசும் செய்யாமல் வேலை வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிஜமாலுமே விபத்து ஏற்பட்ட போதும், அந்த விபத்தையும் ஆக்ஷன் காட்சியாக மாற்றி இருக்கிறோம். அதேபோல் குட் பேட் அக்லி படத்தை எடுத்துக் கொண்டால், அஜித்தின் கேரியரில் ஒரு அதிரடியாக கமர்சியல் படமாக இருக்கும். பில்லா படத்திற்கு பிறகு ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்த படத்தில் அஜித்தை பார்க்கலாம். விடாமுயற்சியை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.