50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
முன்னணி மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தற்போது தனது ரீ எண்ட்ரியில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மோகன்லாலுடன் 'ஓடியன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பி வருவதாகவும் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீகுமார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஸ்ரீகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலையானார்.
இந்த வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் மஞ்சு வாரியர் கோர்ட்டில் ஆஜராகி தனது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீகுமார், மஞ்சு வாரியர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வார் என்று தெரிகிறது.