நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த மகாநடி, சீதாராமம், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இவரை வைத்து தெலுங்கில் படங்களை உருவாக்க தெலுங்கு பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான். இதனை கல்கி படத்தை தயாரித்த வைஜயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ' ஆகாசம் லோ ஒக்க தாரா' என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் ஏற்கனவே 'காளி' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




