இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
"புது ராகம் படைப்பதாலே... நானும் இறைவனே...'' - இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இசைஞானி இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இந்திய சினிமாவின் இசை மேதையான இளையராஜா 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு சிம்பொனி இசையை வெளியிட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்தில் தான் பதிவு செய்த சிம்பொனியை வெளியிட போகிறார். இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள இளையராஜா, அதன் உடன், ‛இங்கிலாந்தில் நான் பதிவு செய்த முழு சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியிட போகிறேன். இதை இந்த தீபாவளி திருநாளில் அறிவிப்பது மகிழ்ச்சி' என குறிப்பிட்டுள்ளார்.