கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் ஒரு ரிசார்ட்டில் நடந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்தத் திருமண நிகழ்வை ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு விற்றதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனன்தான் அதை இயக்கினார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிகழ்ச்சி பற்றிய மேற்தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.
இந்த மாதத் துவக்கத்தில் 'நயன்தாரா . பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஓடிடியில் விரைவில் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.