ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் ஒரு ரிசார்ட்டில் நடந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்தத் திருமண நிகழ்வை ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு விற்றதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனன்தான் அதை இயக்கினார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிகழ்ச்சி பற்றிய மேற்தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.
இந்த மாதத் துவக்கத்தில் 'நயன்தாரா . பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஓடிடியில் விரைவில் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.