தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது படக்குழு தீவிர புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாவதால் ஐதராபாத், டில்லி, மும்பை போன்ற பகுதிகளில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் சூர்யா.
இந்நிலையில், ஐதராபாத்தில் கங்குவா படத்தின் புரமோஷனில் ஈடுபட்ட சூர்யா, இயக்குனர் சிவா ஆகிய இருவரும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜூனா தெலுங்கில் பேசுமாறு சூர்யாவிடம் கூறினார். அதற்கு நான் தெலுங்கில் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவேன். என்னைவிட என் தம்பி கார்த்தி ரொம்ப நன்றாக தெலுங்கு பேசுவார். தன்னுடன் பணியாற்றும் தெலுங்கு நடிகர்களுடன் அவர் தெலுங்கில்தான் பேசுவார். குறுகிய காலத்தில் என் தம்பி தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டதை பார்த்து பொறாமையாக உள்ளது. அதனால் நானும் சீக்கிரமே தெலுங்கு கற்றுக் கொண்டு என் தம்பியை போல சரளமாக தெலுங்கு பேசுவேன் என்று கூறினார் சூர்யா.