தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு விக்ரவாண்டியில் நடத்தினார் விஜய். அதையடுத்து அந்த மாநாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே அவர் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. விஜய் சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை எஸ்ஏசி இயக்கிய படங்களில் நான் நடித்தபோது அவரை பார்த்து இருக்கிறேன். ரொம்ப அமைதியாக இருப்பார் . ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் நான் வேறு ஒரு விஜய்யை பார்த்தேன். அந்த அளவுக்கு அவர் ஆவேசமாக காணப்பட்டார். அதோடு திமுகவின் திராவிட மாடலை கடுமையாக விமர்சித்த விஜய், பாஜகவை தாக்குவதை யோசித்து விட்டு தான் பேசுவார் என்று கருதுகிறேன். முக்கியமாக ஈவேராவின் அடிப்படை நாத்திகம் மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார். மேலும் விஜய் கட்சியின் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணம் சமத்துவ மக்கள் கட்சி கொடிபோல் உள்ளது. அவர் இதை பயன்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன் என்று ராதிகா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.