'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு விக்ரவாண்டியில் நடத்தினார் விஜய். அதையடுத்து அந்த மாநாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே அவர் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. விஜய் சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை எஸ்ஏசி இயக்கிய படங்களில் நான் நடித்தபோது அவரை பார்த்து இருக்கிறேன். ரொம்ப அமைதியாக இருப்பார் . ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் நான் வேறு ஒரு விஜய்யை பார்த்தேன். அந்த அளவுக்கு அவர் ஆவேசமாக காணப்பட்டார். அதோடு திமுகவின் திராவிட மாடலை கடுமையாக விமர்சித்த விஜய், பாஜகவை தாக்குவதை யோசித்து விட்டு தான் பேசுவார் என்று கருதுகிறேன். முக்கியமாக ஈவேராவின் அடிப்படை நாத்திகம் மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார். மேலும் விஜய் கட்சியின் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணம் சமத்துவ மக்கள் கட்சி கொடிபோல் உள்ளது. அவர் இதை பயன்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன் என்று ராதிகா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.