மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு விக்ரவாண்டியில் நடத்தினார் விஜய். அதையடுத்து அந்த மாநாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே அவர் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. விஜய் சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை எஸ்ஏசி இயக்கிய படங்களில் நான் நடித்தபோது அவரை பார்த்து இருக்கிறேன். ரொம்ப அமைதியாக இருப்பார் . ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் நான் வேறு ஒரு விஜய்யை பார்த்தேன். அந்த அளவுக்கு அவர் ஆவேசமாக காணப்பட்டார். அதோடு திமுகவின் திராவிட மாடலை கடுமையாக விமர்சித்த விஜய், பாஜகவை தாக்குவதை யோசித்து விட்டு தான் பேசுவார் என்று கருதுகிறேன். முக்கியமாக ஈவேராவின் அடிப்படை நாத்திகம் மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார். மேலும் விஜய் கட்சியின் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணம் சமத்துவ மக்கள் கட்சி கொடிபோல் உள்ளது. அவர் இதை பயன்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன் என்று ராதிகா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.