10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங் என புதுமையாக செய்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரின் பெரும்பாலான படங்களில் ஒரு முக்கிய காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.
குறிப்பாக ஜிகர் தண்டா, இறைவி, ஜகமே தந்திரம், மகான் போன்ற படங்களில் சிங்கிள் டேக்கில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கினார். தற்போது இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44வது படத்தினை இயக்கியுள்ளார். இதில் 15 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் படமாக்கியுள்ளனர். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறார்கள். இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் செய்துள்ளனர்.