தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவக் கதையா ராதிகாவின் ‛காலனி' | பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம் | ஜனநாயகன் லீக் ; எடிட்டர் காரணமா... குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் : ஆர்கே செல்வமணி பேட்டி | உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நயன்தாரா மீது எழும் விமர்சனங்கள் | ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து? கமல் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்? | ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியது | லீடர், காளிதாஸ் 2, ஹாப்பி ராஜ் படங்கள் மற்றும் கடந்த வார படங்களின் நிலை என்ன? | படம் பிடித்தால் பாருங்க, இல்லைன்னா வேணாம் : மிஸ்டர் எக்ஸ் இயக்குனரின் புதுப்பிரச்சாம் | மாஸ்டர் 2..., லியோ 2... உருவாகிறதா... : மீண்டும் நடிக்கிறாரா விஜய்...? | பிரசாந்த், ஹரி கூட்டணியின் படம் என்னாச்சு |

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங் என புதுமையாக செய்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரின் பெரும்பாலான படங்களில் ஒரு முக்கிய காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.
குறிப்பாக ஜிகர் தண்டா, இறைவி, ஜகமே தந்திரம், மகான் போன்ற படங்களில் சிங்கிள் டேக்கில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கினார். தற்போது இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44வது படத்தினை இயக்கியுள்ளார். இதில் 15 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் படமாக்கியுள்ளனர். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறார்கள். இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் செய்துள்ளனர்.




