‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து திரையரங்குகளில் வெளிவந்த படம் 'நந்தன்'. நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதளவில் வெற்றி படமாக அமையவில்லை.
சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் படத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டு படக்குழுவினரை பாராட்டினார்கள். பா.ஜ.,வைச் சேர்ந்த அண்ணாமலை, பா.ம.க.,வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இந்த நிலையில் 'நந்தன்' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியும் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார். சசிகுமார் மற்றும் இரா.சரவணன் இருவரையும் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதன்படி, “நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய ரஜினிகாந்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி” என குறிப்பிட்டு தனது நன்றியை பகிர்ந்துள்ளார்.