‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. அவரது குழுவில் இடம் பெற்ற மைனர் நடனப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நேற்று முன்தினம் சிறையிலிருந்து வெளிவந்த ஜானி அவருடைய வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குள் அவர் நுழைந்ததையும், மகன், மகள் குடும்பத்தினரை சந்தித்ததையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “இந்த 37 நாட்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகள் இன்று இங்கு வரச் செய்தது. உண்மை பல சமயங்களில் மறைந்தாலும் அழியாது, அது ஒரு நாள் வெல்லும். என்னுடைய குடும்பம் சந்திக்கும் இந்த கடினமான தருணம் என் வாழ்நாளில் எப்போதும் என்னை துளைத்து கொண்டே இருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'மேகம் கருக்காதா…' பாடலுக்காக தேசிய விருது ஜானிக்கு அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் வாங்கினார் ஜானி. ஆனால், அவர் போக்சோவில் கைதானதால் அந்த விருதை தேர்வுக்குழுவினர் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.