தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. அவரது குழுவில் இடம் பெற்ற மைனர் நடனப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நேற்று முன்தினம் சிறையிலிருந்து வெளிவந்த ஜானி அவருடைய வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குள் அவர் நுழைந்ததையும், மகன், மகள் குடும்பத்தினரை சந்தித்ததையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “இந்த 37 நாட்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகள் இன்று இங்கு வரச் செய்தது. உண்மை பல சமயங்களில் மறைந்தாலும் அழியாது, அது ஒரு நாள் வெல்லும். என்னுடைய குடும்பம் சந்திக்கும் இந்த கடினமான தருணம் என் வாழ்நாளில் எப்போதும் என்னை துளைத்து கொண்டே இருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'மேகம் கருக்காதா…' பாடலுக்காக தேசிய விருது ஜானிக்கு அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் வாங்கினார் ஜானி. ஆனால், அவர் போக்சோவில் கைதானதால் அந்த விருதை தேர்வுக்குழுவினர் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.