சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் மறைந்த ஏ.நாகேஸ்வரராவ். தமிழில் 'தேவதாஸ், மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை, கல்யாணப் பரிசு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். 2014ம் ஆண்டு அவர் காலமானார்.
அக்கினேனி சர்வதேச அறக்கட்டளை சார்பாக 2006ம் ஆண்டு முதல் 'ஏஎன்ஆர் தேசிய விருது' வழங்கப்பட்டு வருகிறது. தேவ் ஆனந்த், ஷபனா ஆஸ்மி, அஞ்சலி தேவி, ஜெயசுதா, வைஜெயந்தி மாலா, லதா மங்கேஷ்கர், கே பாலசந்தர், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன், குடிபூடி ஸ்ரீஹரி, எஸ்எஸ் ராஜமவுலி, ஸ்ரீதேவி, ரேகா ஆகியோர் அந்த விருதை வாங்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அந்த விருது இந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் அதை சிரஞ்சீவிக்கு வழங்க உள்ளார்.
விருதை வாங்க வருமாறு நடிகர் சிரஞ்வீயை நேரில் சந்தித்து அழைத்துள்ளார் நாகேஸ்வரராவின் மகனும் நடிகருமான நாகார்ஜூனா. “இந்த ஆண்டு எனது அப்பா ஏஎன்ஆர்-ன் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவதால் இது சிறப்பு வாய்ந்தது. ஏஎன்ஆர் விருதுகள் 2024க்காக நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரை அழைப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விருது விழாவை மறக்க முடியாத ஒன்றாக உருவாக்க வேண்டும்,” என நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.




