தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. அவர் மீது கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டு பதிவாகி பரபரப்பானது. மைனர் நடனப் பெண் ஒருவரை அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு காரணமாக 'போக்சோ' சட்டத்தில் கைதானார்.
கைது செய்யப்பட்ட பின்பு ஜாமின் வழங்கக் கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்று அவருக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ஜாமின் வழஙகியுள்ளது. நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சன்ச்சலகுடா சிறையில் இருக்கும் அவர் நாளை அக்டோபர் 25ம் தேதி விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சமீபத்தில் தேசிய விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமின் பெற்றார் ஜானி. ஆனால், தேசிய விருது தேர்வு குழு அவருடைய தேசிய விருதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதனால், டெல்லி சென்று அவரால் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமின் என்பது 'நிபந்தனை ஜாமின்'. அவரோ, அவருடைய குடும்பத்தினரோ புகார் அளித்தவரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் 'நிபந்தனை ஜாமின்' வழங்கப்பட்டுள்ளது.




