மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்திய நடிகராகிவிட்டார். அது மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் தெரிந்த ஒரு நடிகரும் ஆகிவிட்டார். குறிப்பாக ஆயிரம் கோடி வசூல் படங்களை கொடுத்து வருகிறார். அதேபோல நடிகை சமந்தாவும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான். ஆனால் இத்தனை வருடங்களில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கிர்த்தி சனோன் உள்ளிட்ட பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்த விட்டார் பிரபாஸ் ஆனால் சமந்தாவுடன் இணைந்து அவர் இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. குறிப்பாக இந்த இரண்டு தரப்பு ரசிகர்களும் கூட இந்த ஜோடியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் சமந்தாவுடன் பிரபாஸ் நடிக்காததற்கு ஒரே காரணம் இருவருக்குமான உயர பிரச்சனை என்று தான் தெலுங்கு திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. பிரபாஸ் 6.2 அடி உயரமும் சமந்தா 5.2 அடி மட்டுமே உயரம் என்பதால் படத்தில் ஜோடியாக நடிக்கும் போது இந்த வித்தியாசம் தெளிவாகவே தெரியும் என்பதால் தான் சமந்தாவுடன் நடிக்காமல் ஒதுங்கி உள்ளாராம் பிரபாஸ். ஏற்கனவே அவர் நடித்த சாஹோ திரைப்படத்தில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. இந்த உயர பிரச்சனை காரணமாகத்தான் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




