‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்திற்கு பிறகு அடுத்து இவர் நடிகை திரிஷாவை வைத்து 'மாசாணி அம்மன்' எனும் படத்தை மூக்குத்தி அம்மன் பாணியில் உருவாக்கவுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வந்தது.
ஆனால், இந்த தகவலுக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாமல் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி, நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்குகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார் என தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு போஸ்டரில் குதிரை, அருவா என பல குறியீடுகள் இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் கதை குறித்து வரும் தகவல்கள் என்னவென்றால் மாசாணி அம்மன் கதையில் பல மாற்றங்கள் செய்து தான் இப்போது சூர்யாவின் 45வது படமாக உருவாகிறது என்கிறார்கள்.