தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
எப்எம் வானொலியில் தொகுப்பாளராக இருந்து, சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக உயர்ந்து அடுத்து இயக்குனராகவும் மாறியவர் ஆர்ஜே பாலாஜி. 2020ல் ஓடிடியில் வெளியான 'மூக்குத்தி அம்மன்', 2022ல் தியேட்டர்களில் வெளியான 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை என்ஜே சரவணன் என்ற இயக்குனருடன் இணைந்து இயக்கினார். தனி இயக்குனராக அவர் இயக்க ஆரம்பித்த படம் 'கருப்பு'.
சூர்யாவின் 45வது படமாக ஆரம்பமான இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நேற்று பாலாஜியின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். இதற்கு முன்பு தான் இயக்கிய இரண்டு படங்களிலும், படங்களில் நடித்த போதும் தன்னுடைய பெயரை 'ஆர்ஜே பாலாஜி' என்று போட்டு வந்தவர், நேற்றைய 'கருப்பு' பட போஸ்டரில் தன்னுடைய பெயரை 'ஆர்ஜேபி' என சுருக்கிக் கொண்டுள்ளார்.
இது குறித்து பாலாஜியிடம் கேட்டதற்கு, ''ஊர்வசி மேடம் எனக்குக் கால் பண்ணி ஆர்.ஜே.பாலாஜினு போடாத. 'ஆர்ஜேபி' போடுனு சொன்னாங்க. பெரியவங்க பெயரெல்லாம் சொல்லி, 'அவங்க பெயரெல்லாம் மூனு எழுத்து. அதுமாதிரி நீயும் வச்சுக்கோ. அடுத்தப் படத்தில இருந்து பெயர மாத்திடு'னு சொன்னாங்க. நியூமராலஜி படி ஊர்வசி மேடம் சொல்றதும் சரியாதான் இருக்குனு எனக்கும் தோனுச்சு. ஆனா.. கொஞ்சம் எனக்குக் கூச்சமும் தயக்கமும் இருந்துச்சு'' என்றார்.