இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
எப்எம் வானொலியில் தொகுப்பாளராக இருந்து, சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக உயர்ந்து அடுத்து இயக்குனராகவும் மாறியவர் ஆர்ஜே பாலாஜி. 2020ல் ஓடிடியில் வெளியான 'மூக்குத்தி அம்மன்', 2022ல் தியேட்டர்களில் வெளியான 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை என்ஜே சரவணன் என்ற இயக்குனருடன் இணைந்து இயக்கினார். தனி இயக்குனராக அவர் இயக்க ஆரம்பித்த படம் 'கருப்பு'.
சூர்யாவின் 45வது படமாக ஆரம்பமான இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நேற்று பாலாஜியின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். இதற்கு முன்பு தான் இயக்கிய இரண்டு படங்களிலும், படங்களில் நடித்த போதும் தன்னுடைய பெயரை 'ஆர்ஜே பாலாஜி' என்று போட்டு வந்தவர், நேற்றைய 'கருப்பு' பட போஸ்டரில் தன்னுடைய பெயரை 'ஆர்ஜேபி' என சுருக்கிக் கொண்டுள்ளார்.
இது குறித்து பாலாஜியிடம் கேட்டதற்கு, ''ஊர்வசி மேடம் எனக்குக் கால் பண்ணி ஆர்.ஜே.பாலாஜினு போடாத. 'ஆர்ஜேபி' போடுனு சொன்னாங்க. பெரியவங்க பெயரெல்லாம் சொல்லி, 'அவங்க பெயரெல்லாம் மூனு எழுத்து. அதுமாதிரி நீயும் வச்சுக்கோ. அடுத்தப் படத்தில இருந்து பெயர மாத்திடு'னு சொன்னாங்க. நியூமராலஜி படி ஊர்வசி மேடம் சொல்றதும் சரியாதான் இருக்குனு எனக்கும் தோனுச்சு. ஆனா.. கொஞ்சம் எனக்குக் கூச்சமும் தயக்கமும் இருந்துச்சு'' என்றார்.