தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இருக்கும். கடந்த சில வருடங்களாக நவம்பர் கடைசியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த வருடம் அக்டோபர் மாத மத்தியிலேயே ஆரம்பமாகி கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வசூல் கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் பாதிப்படைந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழையை முன்னிட்டு சில தியேட்டர்களில் நேற்றைய மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி 'அமரன், பிளடி பெக்கர், பிரதர்,' ஆகிய படங்களும், நவம்பர் 14ம் தேதி 'கங்குவா' படமும் வெளியாக உள்ளது. அந்த சமயங்களில் மழை எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அப்படங்களுக்கான ரசிகர்களின் வருகை இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், அடுத்து வர உள்ள படங்கள் அதை சமாளிக்குமா என்ற அச்சமும் தியேட்டர் வட்டாரங்களில் எழுந்துள்ளது.