மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இருக்கும். கடந்த சில வருடங்களாக நவம்பர் கடைசியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த வருடம் அக்டோபர் மாத மத்தியிலேயே ஆரம்பமாகி கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வசூல் கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் பாதிப்படைந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழையை முன்னிட்டு சில தியேட்டர்களில் நேற்றைய மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி 'அமரன், பிளடி பெக்கர், பிரதர்,' ஆகிய படங்களும், நவம்பர் 14ம் தேதி 'கங்குவா' படமும் வெளியாக உள்ளது. அந்த சமயங்களில் மழை எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அப்படங்களுக்கான ரசிகர்களின் வருகை இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், அடுத்து வர உள்ள படங்கள் அதை சமாளிக்குமா என்ற அச்சமும் தியேட்டர் வட்டாரங்களில் எழுந்துள்ளது.