நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இருக்கும். கடந்த சில வருடங்களாக நவம்பர் கடைசியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த வருடம் அக்டோபர் மாத மத்தியிலேயே ஆரம்பமாகி கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வசூல் கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் பாதிப்படைந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மழையை முன்னிட்டு சில தியேட்டர்களில் நேற்றைய மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி 'அமரன், பிளடி பெக்கர், பிரதர்,' ஆகிய படங்களும், நவம்பர் 14ம் தேதி 'கங்குவா' படமும் வெளியாக உள்ளது. அந்த சமயங்களில் மழை எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அப்படங்களுக்கான ரசிகர்களின் வருகை இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், அடுத்து வர உள்ள படங்கள் அதை சமாளிக்குமா என்ற அச்சமும் தியேட்டர் வட்டாரங்களில் எழுந்துள்ளது.