சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? |

அக்குபஞ்சர் வைத்தியரான சீனிவாசன் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தானே தயாரித்த 'லத்திகா' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். தன்னை 'பவர் ஸ்டார்' என்று அவரை அழைத்துக் கொண்டார்.
சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் புகழ்பெற்றார். அதன்பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தவர் இடையிடையே மோசடி வழக்குகளில் சிறைக்கும் சென்று வந்தார்.
இந்த நிலையில் 'பவர் லட்டு என்ற புதிய படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தை எல்.வி கிரியேஷன் சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார். கதை திரைக்கதையை கார்த்திக் காமராஜ் எழுதியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த், மோகன்ராஜ் இசையமைக்கின்றார்.