சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |

தமிழில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதை போன்று ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு டாஸ்கில், கழுதையை பராமரிக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஒரு கழுதையை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டி போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்த பிரோமோ வெளியிடப்பட்டதை அடுத்து சல்மான்கான் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருக்கிறது.
அதில், விலங்குகளை பொழுது போக்குவதற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது அவற்றுக்கு மனஅழுத்தம் அளிப்பது மட்டுமின்றி அதை பார்ப்பவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால் அந்த கழுதையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனபோதும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பீட்டா அமைப்பின் இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை.