வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி |

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக கூறினர்.
இந்த படத்திற்காக மகேஷ் பாபு இதுவரை தோன்றாத தோற்றத்தில் தலையில் நீளமான முடி மற்றும் முகத்தில் அடர்த்தியான தாடியை வளர்த்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.