'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக கூறினர்.
இந்த படத்திற்காக மகேஷ் பாபு இதுவரை தோன்றாத தோற்றத்தில் தலையில் நீளமான முடி மற்றும் முகத்தில் அடர்த்தியான தாடியை வளர்த்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.