அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” |
மலையாள திரையுலகிலிருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சம்யுக்தா மேனன். கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் பாடமாக வெளியான வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததுடன் அந்த படத்தில் ஹிட்டான அடியாத்தி இது என்ன பீலு என்கிற ஒரே பாடலில் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். அதேசமயம் அவருக்கு மலையாளம், தமிழை விட தெலுங்கில் தான் அதிக பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் தற்போது தொடர்ந்து தெலுங்கில் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா.
இந்த நிலையில் நடிகர் ராணா டகுபதி தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சம்யுதா. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரானா கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்த படத்தை யோகேஷ் கேஎம்சி என்பவர் இயக்குகிறார்.
இந்த படம் குறித்து சம்யுக்தா கூறும்போது, “நான் மற்ற படங்களில் பிஸியாக நடித்து வந்தபோது இந்த கதையை கூட கேட்பதற்கு நேரமில்லாமல் இருந்தேன். ஆனாலும் நான் தான் நடிக்க வேண்டும் என பொறுமையாக காத்திருந்த இயக்குனர் யோகேஷ் என்னிடம் கதையை கூறிய போது நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனேன். குறிப்பாக இது கதாநாயகியை மையப்படுத்திய படமாக இருக்கும், இப்படி ஒரு கதையை நான் தேடி வந்த நிலையில் தான் இந்த கதையாக என்னை தேடி வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாள அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் படத்தில் நடிகர் ராணாவின் மனைவி கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.