‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ |
பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி பிரமுகருமான கோவிந்தா இன்று (அக்.,1) அதிகாலை 4:45 மணியளவில் வீட்டில் இருந்தபோது தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில், எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மேலாளர் சுஷி சின்ஹா கூறுகையில், ''இன்று கோல்கட்டா செல்வதற்காக கோவிந்தா தயாராகி கொண்டிருந்தார். அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்தது. அப்போது அதிலிருந்த குண்டு கோவிந்தாவின் காலில் பாய்ந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது உடல் நலத்துடன் இருக்கிறார்'' என்றார்.