ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகும் ராஜேஷ்.எம் | டிவி நிகழ்ச்சிகளும், சினிமா நட்சத்திரங்களும்… வரவேற்பு பெறுவாரா விஜய் சேதுபதி? | ஜல்லிக்கட்டு மூலம் வந்த வேட்டையன் வாய்ப்பு : ரஜினி குறித்து பிரமிக்கும் மலையாள வில்லன் | நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மாரடைப்பால் மறைவு | அதிரடி பாடலுடன் விஜய் 69வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | சட்டம் என் கையில் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் : நடிகர் சதீஷ் வெளியிட்ட தகவல் | படப்பிடிப்பில் விபத்து : சிறிய காயத்துடன் தப்பினார் ஹம்சவர்தன் | 2025, ஆக., 14ம் தேதியில் வெளியாகும் ‛வார் 2' | தமிழில் அறிமுகமாகும் ஹிருதயம் பட இசையமைப்பாளர் | தனுஷின் ‛நீக்' ரிலீஸ் எப்போது |
சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்தது.
தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் 'அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கீழ் கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை. எனவே ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.