'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

கோவையில் வருகிற, 12ம் தேதி கொடிசியா மைதானத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து, நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யுவன் சங்கர் ராஜா கூறியதாவது:
ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களை, புதிய முயற்சிகளுடனும் வழங்க திட்டமிட்டுள்ளோம். கோவை ரசிகர்கள் மிகவும் 'வைப்' உணர்வு கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகள் வாயிலாக தான் நல்ல, நல்ல பாடல்களை என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது. பழைய பாடல்களை 'ரீமேக்' செய்வதை, மற்றொரு பரிணாமமாக பார்க்கிறேன்.
இதனால் பாடலின் தன்மை கெடாது. ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் அடுத்த, 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உண்மைத்தன்மை இருக்காது என்று, ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மைதான்.
நடிகர் விஜய் கட்சிக்கு, பாடல் கேட்டால் கண்டிப்பாக அமைத்து தருவேன்.பழைய பாடல்களை பயன்படுத்துவதில், காப்புரிமை பிரச்னை நிச்சயம் வரும். அதனால் முன் அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவதுதான், சரியானதாக இருக்கும். ரசிகர்களின் கருத்துப்படியே, 'கோட்' திரைப்படத்தில் பாடல்களில் திருத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.




