பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
கோவையில் வருகிற, 12ம் தேதி கொடிசியா மைதானத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து, நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யுவன் சங்கர் ராஜா கூறியதாவது:
ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களை, புதிய முயற்சிகளுடனும் வழங்க திட்டமிட்டுள்ளோம். கோவை ரசிகர்கள் மிகவும் 'வைப்' உணர்வு கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகள் வாயிலாக தான் நல்ல, நல்ல பாடல்களை என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது. பழைய பாடல்களை 'ரீமேக்' செய்வதை, மற்றொரு பரிணாமமாக பார்க்கிறேன்.
இதனால் பாடலின் தன்மை கெடாது. ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் அடுத்த, 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உண்மைத்தன்மை இருக்காது என்று, ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மைதான்.
நடிகர் விஜய் கட்சிக்கு, பாடல் கேட்டால் கண்டிப்பாக அமைத்து தருவேன்.பழைய பாடல்களை பயன்படுத்துவதில், காப்புரிமை பிரச்னை நிச்சயம் வரும். அதனால் முன் அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவதுதான், சரியானதாக இருக்கும். ரசிகர்களின் கருத்துப்படியே, 'கோட்' திரைப்படத்தில் பாடல்களில் திருத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.