இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பூஜா என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், அக்ஷய்குமார், டைகர் ஷராப், பிருத்விராஜ், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியான படம் 'படே மியான் சோட்டே மியான்'. சுமார் 300 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரான இந்தப் படம் படுதோல்வியடைந்தது. வெறும் 100 கோடியை மட்டுமே வசூலித்தது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களான வாஷு பக்னானி, ஜாக்கி பக்னானி படத்தின் இயக்குனரான அலி அப்பாஸ் ஜாபர் மீது மும்பை, பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். படத்திற்காக அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்ற சுமார் 9 கோடி ரூபாய் தொகையை அலி அப்பாஸ் தனது சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டதாக அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்களாம்.
அதே சமயம் தனக்கு சம்பளமாகத் தர வேண்டிய 7 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் இதுவரையிலும் தரவில்லை என அலி அப்பாஸ் சொன்னதாக பாலிவுட் வட்டாரங்களில் தெவிக்கிறார்கள். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய சினிமா ஊழியர்களின் மேற்கு கூட்டமைப்பு தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளதாம்.
இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்கி பக்னானி பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.