'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா? | தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள் | சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன் | 'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | 'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார் | திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணை | பிளாஷ்பேக்: பாலிவுட் படத்தில் நடித்த பத்மினி, ராகினி | பிளாஷ்பேக்: நயன்தாராவை தவறவிட்ட பார்த்திபன் | சம்மர் ஜாக்பாட் ஆக 21 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மோகன்லாலின் படங்கள் | வருண் தவானுக்கு மும்பை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை |

கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதோடு, திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் என்ற படத்தை தற்போது இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி அந்த படத்தை முடித்து விட்டு சூர்யாவுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.




