நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

'நாட்டிய பேரொளி' பத்மினி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அன்றைக்கு இருந்த முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். ஆனால் அவர் எம்.ஆர்.ராதாவுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் 'சித்தி'. பத்மினி கேரியரில் இந்த படம் முக்கியனதாகவும் அமைந்தது. தமிழ் எழுத்தாளரான வை.மு.கோதைநாயகி எழுதிய 'தயாநிதி' என்ற நாவலை தழுவி இந்த படம் உருவானது. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கினார்.
பத்மினியுடன் எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ், வி.கே.ராமசாமி, வி.ஆர்.ராஜகோபால், விஜயநிர்மலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
கதையின் நாயகியான பத்மினிக்கு 3 சகோதரிகள், ஒரு தம்பி. குடும்ப சுமை பத்மினி தலையில். தம்பியை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும். சகோதரிகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். தம்பிக்கு டாக்டர் சீட் கிடைத்தும் அதற்கு பணம் கட்ட முடியாத நிலை. இந்த நிலையில் குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்கு அவர் பெரும் கோடீஸ்வரரான எம்.ஆர்.ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.
கோபம், காமம், திமிர் நிறைந்த எம்.ஆர்.ராதாவை அவர் எப்படி சமாளித்தார். தன் குடும்பத்தை எப்படி கரை சேர்த்தார் என்பதுதான் படத்தின் கதை. பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் 1966ம் ஆண்டு வெளியானது. பின்னர் 'ஆருத்' என்ற பெயரில் இந்தியிலும், 'பின்னி' என்ற பெயரில் தெலுங்கிலும், 'சிக்கம்மா' என்ற பெயரில் கன்னடத்திலும், 'அச்சண்டே பார்யா' என்ற பெயரில் மலையாளத்திலும் ரீமேக் ஆனது. இன்று பத்மினியின் 18வது நினைவு நாள்.