சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

தமிழ் சினிமா உலகில் கடந்த ஓரிரு வாரங்களாக, ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியின் பிரிவு விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி தன் பிரிவு பற்றி ஒரு அறிக்கை வெளியிட, அதற்கடுத்து அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றிப் பலரும் பலவிதமாகக் கமெண்ட் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 'பிரதர்' படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் 'லாகின்' விவரங்கள் கூட தன்னிடம் இல்லை. அதையும் மனைவி வீட்டார்தான் நிர்வகித்து வந்தார்கள் என்பதை மறைமுகமாகத் தெரியப்படுத்தினார்.
கடைசியாக ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த ஜெயம் ரவி, அதன் பின் எந்த பதிவையும் போடவில்லை. தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகி தன்னுடைய 'லாகின்' விவரங்களைப் பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முதல் தனது அடுத்த படமான 'பிரதர்' பற்றிய சில பதிவுகளை அப்டேட் செய்துள்ளார். அந்தப் பதிவுகளிலும் ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவு குறித்து பலரும் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.