தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமா உலகில் கடந்த ஓரிரு வாரங்களாக, ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியின் பிரிவு விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவி தன் பிரிவு பற்றி ஒரு அறிக்கை வெளியிட, அதற்கடுத்து அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றிப் பலரும் பலவிதமாகக் கமெண்ட் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 'பிரதர்' படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் 'லாகின்' விவரங்கள் கூட தன்னிடம் இல்லை. அதையும் மனைவி வீட்டார்தான் நிர்வகித்து வந்தார்கள் என்பதை மறைமுகமாகத் தெரியப்படுத்தினார்.
கடைசியாக ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த ஜெயம் ரவி, அதன் பின் எந்த பதிவையும் போடவில்லை. தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகி தன்னுடைய 'லாகின்' விவரங்களைப் பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முதல் தனது அடுத்த படமான 'பிரதர்' பற்றிய சில பதிவுகளை அப்டேட் செய்துள்ளார். அந்தப் பதிவுகளிலும் ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவு குறித்து பலரும் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.