'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு | டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' |

பின்னணி பாடகி சுசித்ரா அவ்வப்போது சோசியல் மீடியாவில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்த சர்ச்சை வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் மறைந்த இயக்குனர் பாலசந்தர் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதையடுத்து பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்தார்கள். அதையடுத்து மணிமேகலை - பிரியங்கா விவகாரத்திலும் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் சுசித்ரா. அதேபோல் இதற்கு முன்பு மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து நடத்தியதாகவும், அதில் இளம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை உடனடியாக மறுத்திருந்தார் ரீமா கல்லிங்கல். இந்நிலையில் தற்போது அவர் தன்னைப் பற்றி ஆதாரம் இல்லாத பொய்யான செய்திகளை பாடகி சுசித்ரா வெளியிட்டதாக சொல்லி அவர் மீது கொச்சின் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். ஆன்லைன் மூலம் அவர் அளித்த இந்த புகார் மீதான நடவடிக்கையை எடுக்குமாறு எர்ணாகுளம் காவல் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாடகி சுசித்ராவை கைது செய்து இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.




