வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

திருநெல்வேலி தமிழராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு, கன்னட படங்களில் இசை அமைத்து வந்த பரத்வாஜ் 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஆட்டோகிராப், ஐயா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். முன்னணியில் இருக்கும்போதே திடீரென வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சில ஆல்பங்களுக்கு இசை அமைத்தார். பின்னர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் தன் மகளுடன் வசித்தார். கடைசியாக அவர் இசை அமைத்தது 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் இருவர்' படத்திற்கு.
தற்போது புத்துணர்ச்சியுடன் மீண்டும் திரையிசை உலகத்திற்கு திரும்பி இருக்கிறார். இசை நிகழ்ச்சியின் மூலம் தனது ரீ என்ட்ரியை தொடங்கி உள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நாளை (19ம் தேதி) இசை நிகழ்ச்சி நடத்துகிறார். திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூர் ரோட்டரி கிளப் அங்கு புற்று நோயாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவமனையை கட்டி வருகிறது. அதற்கு நிதி திரட்டும் விதமாக, இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.




