டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? |
திருநெல்வேலி தமிழராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு, கன்னட படங்களில் இசை அமைத்து வந்த பரத்வாஜ் 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஆட்டோகிராப், ஐயா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். முன்னணியில் இருக்கும்போதே திடீரென வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சில ஆல்பங்களுக்கு இசை அமைத்தார். பின்னர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் தன் மகளுடன் வசித்தார். கடைசியாக அவர் இசை அமைத்தது 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் இருவர்' படத்திற்கு.
தற்போது புத்துணர்ச்சியுடன் மீண்டும் திரையிசை உலகத்திற்கு திரும்பி இருக்கிறார். இசை நிகழ்ச்சியின் மூலம் தனது ரீ என்ட்ரியை தொடங்கி உள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நாளை (19ம் தேதி) இசை நிகழ்ச்சி நடத்துகிறார். திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூர் ரோட்டரி கிளப் அங்கு புற்று நோயாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவமனையை கட்டி வருகிறது. அதற்கு நிதி திரட்டும் விதமாக, இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.