பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
திருநெல்வேலி தமிழராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு, கன்னட படங்களில் இசை அமைத்து வந்த பரத்வாஜ் 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஆட்டோகிராப், ஐயா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். முன்னணியில் இருக்கும்போதே திடீரென வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சில ஆல்பங்களுக்கு இசை அமைத்தார். பின்னர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் தன் மகளுடன் வசித்தார். கடைசியாக அவர் இசை அமைத்தது 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் இருவர்' படத்திற்கு.
தற்போது புத்துணர்ச்சியுடன் மீண்டும் திரையிசை உலகத்திற்கு திரும்பி இருக்கிறார். இசை நிகழ்ச்சியின் மூலம் தனது ரீ என்ட்ரியை தொடங்கி உள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நாளை (19ம் தேதி) இசை நிகழ்ச்சி நடத்துகிறார். திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூர் ரோட்டரி கிளப் அங்கு புற்று நோயாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவமனையை கட்டி வருகிறது. அதற்கு நிதி திரட்டும் விதமாக, இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.