நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
திருநெல்வேலி தமிழராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு, கன்னட படங்களில் இசை அமைத்து வந்த பரத்வாஜ் 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஆட்டோகிராப், ஐயா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். முன்னணியில் இருக்கும்போதே திடீரென வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சில ஆல்பங்களுக்கு இசை அமைத்தார். பின்னர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் தன் மகளுடன் வசித்தார். கடைசியாக அவர் இசை அமைத்தது 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் இருவர்' படத்திற்கு.
தற்போது புத்துணர்ச்சியுடன் மீண்டும் திரையிசை உலகத்திற்கு திரும்பி இருக்கிறார். இசை நிகழ்ச்சியின் மூலம் தனது ரீ என்ட்ரியை தொடங்கி உள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நாளை (19ம் தேதி) இசை நிகழ்ச்சி நடத்துகிறார். திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூர் ரோட்டரி கிளப் அங்கு புற்று நோயாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவமனையை கட்டி வருகிறது. அதற்கு நிதி திரட்டும் விதமாக, இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.