நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'தேவரா'. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். கொரட்டலா சிவா இயக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். தெலுங்கில் தயாராகும் இந்த படம் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா நேற்று நடந்தது.
இதில் ஜான்வி கபூர் பேசியதாவது : சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் (ஸ்ரீதேவி) இருந்த பல நினைவுகள் இருக்கு. அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன். தேவரா எனக்கு ஸ்பெஷல் படம். உங்களுக்கும் பிடிக்கும். நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.
ஜூனியர் என்.டி.ஆர் பேசியதாவது : சென்னை எனக்கு பிடித்த இடம். சென்னையில்தான் நான் குச்சுப்புடி நடனம் கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. தேவரா எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. படம் சிறப்பாக வர உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் ஸ்பெஷலானதாக அமையும். ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும்.
சினிமாவை கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல் வுட் என்று பிரித்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே சினிமாதான். எனக்கு நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறது. குறிப்பாக வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தெலுங்கில் டப் பண்ணலாம். அது நடக்கும் என்று நம்புகிறேன் என்றார்.