தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பீட்சா நடிகருடன், மூன்றெழுத்து படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட அலம்பல் செய்து, கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார், உலக நாயகரின் வாரிசு. இதையடுத்து, எந்த இயக்குனரும் அவரை படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை.
தற்போது, உலக நாயகரை வைத்து படம் எடுத்த இயக்குனர் ஒருவர், உச்ச நடிகரை வைத்து, தான் இயக்கி வரும் புதிய படத்தில், அவரை நடிக்க வைத்திருக்கிறார். இதை வைத்து, விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக, சில இயக்குனர்களை தேடி சென்று, உலக நாயகரின் வாரிசு, வாய்ப்பு கேட்டபோதும், மணிக்கணக்கில் அவருடன் அரட்டை அடிப்பவர்கள், இவர் பட வாய்ப்பு என்றதும் தெறித்து ஓட்டம் பிடித்து விடுகின்றனர்.
அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் 'ஹீரோ'களை அம்மணி மதிக்காமல் நடந்து கொண்டதால், ஒட்டுமொத்த கோலிவுட்டே வெறுத்து ஒதுக்கத் துவங்கி விட்டது.




