ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தளபதி நடிகரின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் நடிப்பது போன்று தனக்கும் கதை தயார் செய்யுமாறு இயக்குனர்களை கேட்டுக்கொண்டு வந்த அமரன் நடிகர், சமீபத்தில் ஒரு இயக்குனரிடம், பாட்ஷா படத்தை போன்ற ஒரு கதை சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அதிலும், உச்ச நடிகருக்கே சவால் விடும் வகையில் அதிரடியான காட்சிகள் அந்த படத்தில் இருக்க வேண்டுமென்று பெரிய, 'பில்டப்' கொடுத்துள்ளார்.
அதைக்கேட்ட அந்த இயக்குனரோ, 'நீங்கள் சொன்ன அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, உச்ச நடிகரே தயங்கி வருகிறார். இந்நிலையில், உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. ஆசைப்படலாம் ஆனால், தகுதிக்கு மீறி பேராசை எல்லாம் படக்கூடாது...' என்று கூறி, நடிகருக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.