புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதையடுத்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து மிஸ்டர் எக்ஸ் என்று படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறியிருக்கிறார்.
அதில், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரின் பெயர் தாரா. ரஜினியின் மனைவி வேடம் என்றாலும் இந்த வேடத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் உள்ளன. அதனால் என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் . ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் வேட்டையன் படத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நான் நடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.
போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த படம் தமிழகத்தில் நடைபெற்ற சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் ரஜினி - மஞ்சுவாரியர் ஆடி, பாடிய மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.