ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் | நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசை : 'தேவரா' விழாவில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி பேச்சு | நடிகைகள் குறித்து அவதூறு பேசும் காந்தாராஜ், பயில்வான் ரங்கநாதன் மீது நடிவடிக்கை: மாதர் சங்கம் கோரிக்கை | நடன மங்கை, நாயகி, நடுங்க செய்த வில்லி : நடிகை சிஐடி சகுந்தலாவின் வாழ்க்கை பயணம் |
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதையடுத்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து மிஸ்டர் எக்ஸ் என்று படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறியிருக்கிறார்.
அதில், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரின் பெயர் தாரா. ரஜினியின் மனைவி வேடம் என்றாலும் இந்த வேடத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் உள்ளன. அதனால் என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் . ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் வேட்டையன் படத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நான் நடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.
போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த படம் தமிழகத்தில் நடைபெற்ற சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் ரஜினி - மஞ்சுவாரியர் ஆடி, பாடிய மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.