தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது |
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ஒரு வாரத்திற்கு முன்பும், ஒரு வாரத்திற்கு பின்பும் மற்ற படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். தியேட்டர்கள் கிடைக்காமல் போவதே இதற்குக் காரணம். கடந்த வாரம் 5ம் தேதி விஜய் நடித்த 'தி கோட்' படம் தமிழக தியேட்டர்களை பெருவாரியாக ஆக்கிரமித்தது. இந்த வாரம் வரையிலும் அந்தப் படம் தாக்குப் பிடித்து ஓட வாய்ப்புள்ளது. அதனால், மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் நிச்சயம் கிடைக்காது. அதனால், இந்த வார வெள்ளிக்கிழமையான நாளை (செப்டம்பர் 13ம் தேதி) ஒரே ஒரு படம்தான் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேக் குமார் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் மற்றும் பலர் நடித்த 'கொட்டேஷன் கேங்' படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அப்போது இப்படம் வெளியாகவில்லை. நாளைய வெளியீட்டிற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
அதே சமயம், அடுத்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.