பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ஒரு வாரத்திற்கு முன்பும், ஒரு வாரத்திற்கு பின்பும் மற்ற படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். தியேட்டர்கள் கிடைக்காமல் போவதே இதற்குக் காரணம். கடந்த வாரம் 5ம் தேதி விஜய் நடித்த 'தி கோட்' படம் தமிழக தியேட்டர்களை பெருவாரியாக ஆக்கிரமித்தது. இந்த வாரம் வரையிலும் அந்தப் படம் தாக்குப் பிடித்து ஓட வாய்ப்புள்ளது. அதனால், மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் நிச்சயம் கிடைக்காது. அதனால், இந்த வார வெள்ளிக்கிழமையான நாளை (செப்டம்பர் 13ம் தேதி) ஒரே ஒரு படம்தான் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேக் குமார் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் மற்றும் பலர் நடித்த 'கொட்டேஷன் கேங்' படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அப்போது இப்படம் வெளியாகவில்லை. நாளைய வெளியீட்டிற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
அதே சமயம், அடுத்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.