அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
கன்னட திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் துருவ சார்ஜா. கடந்த சில வருடங்களுக்கு முன் காலமான நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி இவர். அது மட்டுமல்ல நடிகர் அர்ஜுனின் உறவு முறையில் அவருக்கு மருமகனும் கூட. சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களை தமிழிலும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் துருவ சார்ஜாவின் பெர்சனல் ஜிம் பயிற்சியாளரை அவரது மேலாளர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையில் வெளியிட்டுள்ள தகவலில் துருவ சார்ஜாவின் மேலாளர் அஸ்வின் என்பவர் ஜிம் பயிற்சியாளர் பிரசாந்த் பூஜாரியை, தனக்கு கீழ் பணி புரியும் இரண்டு நபர்களை விட்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார். மே 29ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து தற்போது பிரசாந்த் பூஜாரி கொடுத்துள்ள புகாரின் பேரில் அஸ்வின் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் துருவ சார்ஜா உடன் ஜிம் பயிற்சியாளரான பிரசாந்த் பூஜாரி நெருக்கமான நட்பு காட்டுவதை விரும்பாததால் அஸ்வின் இப்படி தாக்குதலுக்கு ஏற்பாடு செய்து, அதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தனது உதவியாளர்களை ஏவி விட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.