23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா |
மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாகவே சில நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் வாய்ப்பு தேடி நடிக்கப் போன மற்றும் நடித்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோரால் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளானதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து இப்படி பலரும் துணிச்சலாக பேசத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் எப்போதுமே புகார் தெரிவிப்பவர்களின் கருத்துக்களை மட்டுமே வைத்து முடிவு செய்யாமல் எதிர் தரப்பினரின் பக்கம் உள்ள நியாயங்களையும் கேட்க வேண்டும் என நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் ஆண்களும் கூட பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டங்களில் நான் நடித்த ஒரு படத்தின் ஒருங்கிணைப்பு நபர் ஒருவர் இதுபோன்று காஸ்டிங் கவுச் விஷயத்தை ஊக்கப்படுத்தி செயல்பட்டு வந்தார். இது குறித்து படப்பிடிப்பு தளத்திலேயே அவரை தட்டிக்கேட்டு 'கவனிக்க' வேண்டிய விதத்தில் கவனிக்கவும் செய்தேன். ஆனால் அதன்பிறகு என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
அட்ஜஸ்ட் செய்துகொள்ள மறுக்கும் நடிகைகளை மட்டும் படத்தை விட்டு நீக்காமல் இப்படி தட்டிக் கேட்பவர்களையும் அதிலும் பிரபலமான முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ்கோபியின் மகனையே ஒரு படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான தகவல் தான்.