ஜெயம் ரவியின் பிரிவு விவகாரம்; தவிப்பில் தயாரிப்பாளர்கள் | அண்ணன், தம்பியுடன் மீண்டும் கூட்டணியில் ஜிவி பிரகாஷ் | பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி |
மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தையும் தாண்டி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக ஹிந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதுவரை ஹிந்தியில் 27 படங்களை இயக்கியுள்ள அவர், கடந்த 2021ல் ஹங்கமா-2 என்கிற படத்தை இயக்கியிருந்தார்.
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் நுழையும் அவர் மீண்டும் அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அக்ஷய் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பூத் பங்களா' என டைட்டில் வைக்கப்பட்டு இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 வருடங்கள் கழித்து இயக்குனர் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிப்பதற்கு தான் ஆவலாக இருப்பதாக அக்ஷய் குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 'பாஹம் பாக் ஹேரா பெரி, கரம் மசாலா' என பிரியதர்ஷனுடன் இணைந்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அக்ஷய் குமார், கடந்த 2010ல் அவரது இயக்கத்தில் 'கட்டா மீத்தா' என்கிற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போதைய இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த பூத் பங்களா திரைப்படம் ஒரு ஹாரர் பேண்டஸி திரில்லராக உருவாக இருக்கிறது.