பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
சிறகடிக்க ஆசை தொடரின் கதாநாயகியான கோமதி பிரியா, சிம்பிளான தோற்றத்துடனும் எளிமையான நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான விஜய் டிவி விருது நிகழ்வில் கோமதி பிரியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய கோமதி பிரியா, 'இந்த மீனா கேரக்டர் என்னுடைய நிஜ வாழ்விலும் மிகவும் மேட்ச் ஆனது. இந்த சீரியலில் எனக்கு எப்படி அப்பா இல்லையோ அது போல என் நிஜ வாழ்விலும் எனக்கு அப்பா இல்லை. அம்மா தான் தனியாக கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். நான் சென்னைக்கு வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆனால் இப்போது மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று பேசியிருந்தார். அப்போது கோமதி பிரியாவின் அப்பாவின் உருவத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த விழா குழுவினர் அவர் தனது மகளை வாழ்த்துவது போல் எடிட் செய்திருந்தனர். அதை பார்த்த கோமதி பிரியா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.