‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இங்குள்ள முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவாவதிக்கவும், முடிவெடுக்கவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 8ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய கமிட்டி அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நடிகர் நடிகைகளின் நட்சத்திர கலை விழா நடத்துவது குறித்தும், நவம்பர் 1ந் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பது குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.