பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் |

ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இங்குள்ள முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவாவதிக்கவும், முடிவெடுக்கவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 8ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய கமிட்டி அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நடிகர் நடிகைகளின் நட்சத்திர கலை விழா நடத்துவது குறித்தும், நவம்பர் 1ந் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பது குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.